தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் – கடற்படை முகாமிற்கு முன்னால் குவிந்த மக்கள்
6 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர். அந்த காணிகளை கடந்த சில வருடங்களாக படை முகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடுசெய்ய எடுத்த முயற்சிகள் மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது. அத்துடன் காணி எடுத்தற் சட்டம் 05 ஆம்…
The post தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் – கடற்படை முகாமிற்கு முன்னால் குவிந்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் – கடற்படை முகாமிற்கு முன்னால் குவிந்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
