ஐ.நா மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் அழைப்பு!
8 view
ஐக்கிய நாடுகள் சபையின் பஞ்சாங்கத்தின் கீழ் மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற உலகளாவிய நல்லிணக்கத்திற்கான சமாதானத்தை ஏற்படுத்துபவர்களின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், மனித விழுமியங்கள் வேகமாக அழிவடைந்து வருவது மனிதகுலத்திற்கு மிகவும் ஆபத்தான அச்சுறுத்தலாக இருப்பதால், தனது முன்மொழிவை ஆராய்ந்து பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநாட்டில் பங்குபற்றியவர்களை வலியுறுத்தினார். மனிதநேய தினத்தை பிரகடனம் செய்வது உலகளாவிய சமூகத்திற்கு, குறிப்பாக உலகத் தலைவர்களுக்கு மனித விழுமியங்களை ஊக்குவிப்பதற்கான இன்றியமையாத தேவையை வலியுறுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார். “சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முக்கியமான விடயம் குறித்து கலந்துரையாடி, இந்த கருத்தை உலகெங்கிலும் பரப்புவதற்கான சிந்தனைகள், பரிந்துரைகள் மற்றும் சாத்தியமான வழிவகைகளை கண்டறியுமாறு மாநாட்டின் பிரதிநிதிகளான உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் கூறினார். அறியாமை அல்லது மனிதநேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீதான அக்கறையின்மை…
The post ஐ.நா மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நா மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
