ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை!
15 view
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
The post ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
