இலங்கையில் தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை
6 view
இலங்கையில் பழங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இறக்குமதி வரி உயர்வினால் இலங்கையில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது. இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தோடம் பழம் 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தோடம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதினால் இறக்குமதி செய்யப்படும் தோடம்பழங்கள் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
The post இலங்கையில் தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
