பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை – நிர்மலா சீதாராமன்
23 view
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப் படுவதாக நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்னை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர்கல்விக்காக பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச் சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் எனவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
The post பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை – நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை – நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
