முல்லைதீவில் அவசர நிலைமை – கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் – மக்கள் அச்சத்தில்
10 view
நாட்டில் அண்மைக் காலமாக சீரற்ற காலநிலை நிலவுகிறது.பல பிரதேசங்களில் மழை ,காற்று ,பனி என வானிலை மாற்றம் நிகழ்கிறது.இன்றும் கூட நாட்டுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முலைத்தீவு மாவட்டத்தில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது.அலைகள் கரையை தாண்டி வெளிப்புறமாக வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் செம்மலை பகுதியில் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது.இதனை அடுத்து மண் மூடைகளை அடுக்கி பிரதேச மக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.எனினும் தொடர்ச்சியாக கடல் நீர் உட்புகுமாயின் வீடுகள்,பயிர் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
The post முல்லைதீவில் அவசர நிலைமை – கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் – மக்கள் அச்சத்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைதீவில் அவசர நிலைமை – கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் – மக்கள் அச்சத்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
