பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா அணி!
7 view
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற பங்களாதேஷ் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. டாக்காவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 50 ஓவர்கள்…
The post பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
