சிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம் – கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்!
6 view
சிறுநீரக மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், உடல் உறுப்புக் கடத்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்தக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலை கூறியுள்ளது. எனவே ஊடகங்கள் தெரிவித்த கூற்றுகளில் உள்ள உண்மைகளை விசாரணைகள் விரைவில் வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புவதாக குறித்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக உலகத்தரம் வாய்ந்த செயல்முறைகள், நடைமுறைகள், பணியாளர்கள் மற்றும் வசதிகளுடன் நோயாளிகளுக்கு சில சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதன் காரணமாக, இவ் தனியார் வைத்தியசாலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நற்பெயரைப் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தமது மருத்துவமனை, 1200 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தியுள்ளது. அத்துடன்; 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இவ்வாறான சேவைகளுக்காக, தமது மருத்துவமனை பல…
The post சிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம் – கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம் – கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
