இணைப்பு ஆட்சி முறையின் மூலமே இலங்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்-முன்னாள் அரசியல் கைதி கோரிக்கை!
12 view
ஒரே இராணுவத்தைக் கொண்டதாகவும் பொலிஸ், காணி அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு இணைப்பு ஆட்சி முறையின் மூலமே இலங்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் அரசியல் கைதியும், முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான செ.அரவிந்தன் தெரிவித்தார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (07.12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் கிழமைகளில் அரசாங்கத்துடன் தமிழ் கட்சிகள் பேச இருக்கின்ற ஒரு நிலையில் பொது மக்கள் சார்பாகவும், முன்னாள் போராளிகள் சார்பாகவும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். அதாவது 13 ஆவது திருத்தச் சட்டம், 13 பிளஸ் போன்ற சொல்லாடல்களோடு அரசாங்கம் மாவட்ட சபைகளுக்குள் தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பேசுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கை நாட்டில் தமிழர்களுக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் எந்த வகையிலும்…
The post இணைப்பு ஆட்சி முறையின் மூலமே இலங்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்-முன்னாள் அரசியல் கைதி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணைப்பு ஆட்சி முறையின் மூலமே இலங்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்-முன்னாள் அரசியல் கைதி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
