உள்ளகப் பொறிமுறையிலேயே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு- பிரதமர் மீண்டும் உறுதி!
15 view
“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும்.”இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயற்பட வேண்டும். சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
The post உள்ளகப் பொறிமுறையிலேயே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு- பிரதமர் மீண்டும் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளகப் பொறிமுறையிலேயே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு- பிரதமர் மீண்டும் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
