யாழில் ஊடகத்தில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட வீதி!
1 view
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்பாகம் வெட்டப்படாத நிலையில் காணப்பட்டது. குறித்த வீதியானது சனப் புழக்கம் அதிகமுள்ள வீதியாக காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது. எனவே அதனை சீர்செய்யுமாறு மக்களால் நேற்றையதினம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்தான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரால் அந்த அடிப்பாகம் வெட்டி அகற்றப்பட்டது.
The post யாழில் ஊடகத்தில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஊடகத்தில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
